|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
புதுமைப்பித்தன் சிறுகதை: பல ரித்த
,
ரு மிண்தொகுப்புத்திட்டட் எண;
பாகம் 4 , சிறுகதைகள் 61-90
putumaippittan
part 4, short stories 61-90
In Tamil script, unicodeutf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this
work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-
reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne,
Switzerland.
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of
https:www.projectmadurai.org
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
projectmadurai org
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact 2
பாகம் 4 , சிறுகதைகள் 61-90
உள்ளடக்கம்
61. நொண்டி 76. சாப விமோசனம்
62. ஒப்பந்தம் 77. சாளரம்
63. ஒரு கொலை அனுபவம் 78. சாமாவின் தவறு
64. பால்வண்ணம் பிள்ளை 79. சாயங்கால மயக்கம்
65. பறிமுதல் 80. சமாதி
66. பாட்டியின் தீபாவளி 81. சமாதி
67. பித்துக்குளி 62. சாமியாரும் குழந்தையும் சீடையும்
68. பொய்க் குதிரை 83. சணப்பன் கோழி
69. 'பூசனிக்காய்' அம்பி 84. சங்குத் தேவனின் தர்மம்
70. புரட்சி மனப்பான்மை 85. செல்வம்
71. புதிய கூண்டு 86. செவ்வாய்
72. புதிய கந்த புராணம் 87. சிற்பியின் நரகம்
73. புதிய நந்தன் 68. சித்தம் போக்கு
74. புதிய ஒளி 89. சித்தி
75. ராமனாதனின் கடிதம் 90. சிவசிதம்பர சேவுகம்
61. நொண்டி
இந்தச் சம்பவம் எனக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் நேர்ந்தது.
ரயிலில், ஒருவரும் இல்லாத தனி வண்டியாகப் பார்த்து, செளகரியமாகப் படுக்கையை
விரித்துவிட்டு, தொந்தரவில்லாமல் பிரயாணம் செய்யலாம் என்று
நினைத்துக்கொண்டே உட்காருமுன், மறுபடியும் வண்டியின் கதவு திறக்கப்பட்டது.
"ஜாக்கிரதையாக ஏறுங்கள்; தரையிலிருந்து படி வெகு உயரமாக இருக்கிறது" என்றது
ஒரு குரல்.
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
ரயிலில், ஒருவரும் இல்லாத தனி வண்டியாகப் பார்த்து, செளகரியமாகப் படுக்கையை
விரித்துவிட்டு, தொந்தரவில்லாமல் பிரயாணம் செய்யலாம் என்று
நினைத்துக்கொண்டே உட்காருமுன், மறுபடியும் வண்டியின் கதவு திறக்கப்பட்டது
"ஜாக்கிரதையாக ஏறுங்கள்; தரையிலிருந்து படி வெகு உயரமாக இருக்கிறது" என்றது
ஒரு குரல் 3
"அதற்கென்ன, நான் கெட்டியாகத்தான் பிடித்துக் கொண்டிருக்கிறேன்" என்றது
மற்றொரு குரல்.
கதர்குல்லாய் அணிந்த தலை, பிறகு இரும்புக் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துத்
தொங்கிக் கொண்டிருக்கும் இரு கைகள். மெதுவாகத் தடித்த சரீரத்தை அப்படியே
உயர இழுக்கும்பொழுது, மரக்கட்டைகள் ரயில் வண்டியின் படிகளில் இடிபடும் சப்தம்
கேட்டது.
மனிதனின் உடம்பு மேலே வந்ததும், தொள தொளவென்று பஞ்சகச்சம்
வைத்துக்கட்டிய வேஷ்டிக்கிடையில் இரண்டு மரக்கால்கள் தெரிந்தன.
"சரிதானே ஸார்" என்று வெளியே யிருந்த குரல் கேட்டது.
"ஆமாம் அப்பா" என்றார் வந்தவர்.
"இதோ இருக்கிறது. உங்கள் கைத்தடியும் மூட்டைகளும்."
வேலைக்காரன் உள்ளே வந்து கையிலிருந்த மூட்டைகளை மேற்பலகையில்
ஒவ்வொன்றாக வைத்தான்.
"ஐந்து மூட்டைகள், பட்சணங்கள், விளையாட்டுப் பொம்மைகள், கொட்டு,
விளையாட்டுத் துப்பாக்கி, புதிதாக வாங்கிய துணிகள்."
"சரி! சரி!"
"செளகரியமாய்ப் போய்விட்டு வரணும்" என்று கும்பிட்டான்.
"உன் உடம்பையும் பார்த்துக் கொள்" என்று ஒரு ரூபாயை அவன் கையில் கொடுத்து
விட்டுச் சிரித்தார்.
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
"
"செளகரியமாய்ப் போய்விட்டு வரணும்" என்று கும்பிட்டான்
"உன் உடம்பையும் பார்த்துக் கொள்" என்று ஒரு ரூபாயை அவன் கையில் கொடுத்து
விட்டுச் சிரித்தார் 4
அவனும் கதவைச் சாத்திக் கொண்டு போய்விட்டான்.
வந்தவருக்கு வயது முப்பது அல்லது முப்பத்தைந்திற்கு மேல் இராது; தலை பூராவும்
நரைத்துவிட்டது. கதர் உடைதான். நல்ல கறுத்து அடர்ந்த மீசை. திடீரென்று வந்த
ஊனத்தினால், உழைப்பு நின்றுவிட அதனால் ஏற்பட்ட உடல் பருமன்.
வந்தவர் முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு, "பீடி குடித்தால்
உங்களுக்குத் தொந்தரவாக இருக்காதே?" என்றார்.
"தாராளமாகக் குடியுங்கள்."
அந்தப் பார்வை, அந்தக் குரல் எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறது. எப்பொழுது?
அதுதான் ஞாபகம் வரவில்லை.
அவரும் என்னையே கவனித்துக் கொண்டு இருந்தார். அவருக்கும்
பிடிபடவில்லைபோல் இருக்கிறது.
இப்படி மரியாதைக் குறைவாக வெருகுபோல் விழிப்பதில் கூச்சமாயிருந்ததால்
முகத்தைக் கொஞ்சம் வேறு பக்கம் திருப்பினேன். ஆனால் இந்த மனம் இருக்கிறதே!
மறுபடியும் கண்கள் அந்த திசையே நோக்கின.
"தங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே. எனக்குப் பிடிபடவில்லை" என்றேன்.
"அப்படித்தான் எனக்கும் இருக்கிறது" என்றார்.
"என் பெயர் ஹரிஹரய்யர். ரெவினியு இன்ஸ்பெக்டர்" என்றேன்.
அவரும் கொஞ்சம் யோசித்தார். "ஆமாம் ஸார், நாம் சென்னையில் நான்கு
வருஷங்களுக்கு முன் சந்தித்ததாக ஞாபகம்" என்றார்.
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
அவரும் கொஞ்சம் யோசித்தார் "ஆமாம் ஸார், நாம் சென்னையில் நான்கு
வருஷங்களுக்கு முன் சந்தித்ததாக ஞாபகம்" என்றார் 5
"ஆமாம்! ஆமாம்! தாங்கள்தான் தொண்டர் ராமகிருஷ்ணனோ?"
"ஆமாம்! இந்தக் கால்கள் தடியடியில் போகும்வரை தொண்டனாக இருந்தேன்."
நினைவு வந்து விட்டது. நான்கு வருடங்களுக்கு முன் என்ன அழகு? என்ன வாலிபம்!
மெலிந்ததாயினும் நல்ல கட்டுள்ள உடல். அவரைப் பற்றி நினைவிருக்க வேண்டிய
காரணங்கள் உண்டு. ஆமாம், அவரைப் பற்றிய ஒரு காதல் விஷயம் நன்றாக
நினைவிற்கு வருகிறது. அந்தப் பெண் மணோன்மணி. மறியலுக்காக வந்த ஸ்திரீ
தொண்டர்களில் ஒருத்தி. திருமணத்தை எதிர்நோக்கிக்கொண்டு இருந்தார்கள். என்ன
காதல், என்ன குதூகலம்! அப்பொழுதுதான் அவர்களைச் சந்தித்தேன்.
எனது கண்கள் மேலே பலகையில் இருந்த விளையாட்டுச் சாமான்களில் சென்றன.
ரயில் வண்டி தண்டவாளங்களில் சற்றுக் குதித்துச் செல்லும்பொழுது, அந்த
வேலைக்காரனது வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.
"ஜந்து மூட்டைகள், பக்ஷணங்கள், விளையாட்டுப் பொம்மைகள், கொட்டு,
விளையாட்டுத் துப்பாக்கி, புதிதாக வாங்கிய துணி."
உடனே பளிச்சென்று எனது மனம், முடிவுபெறாத காதல் கதையின் கதைகளைத்
தானே கட்டிக்கொண்டு போக ஆரம்பித்தது. உலகத்தில் எந்தப் பாகத்திலும்
எழுதப்படும் காதல் கதைகளைப் போலத்தான். தேச விடுதலைக்காகக் காலிழந்த
காதலன். தனக்காகக் காத்திருந்த கன்னியை மணந்து கொள்வது.
நினைக்க நினைக்க அதன் அழகு, அதன் பொலிவு, அதன் தியாகம் எல்லாம்
புஸ்தகத்தில் இருக்கிற மாதிரி வெகு எளிதாக நிறைவேறிவிட்டன. இந்த மாதிரிச்
சம்பவங்களைப் படிப்பதில் எவ்வளவு ஆனந்தம்! அப்படியே தன்னை மறந்து
விடுகிறோம். அந்த உயர்ந்த லட்சியத்தில் - உலகத்தில் அப்படியிருக்கிறதா?
ஏமாற்றந்தான்.
இதைவிட வேறு மாதிரி என் மனது கதை திரிக்க ஆரம்பித்தது. ஒரு வேளை அவன்
கால்களை இழக்குமுன் திருமணமாகியிருக்கலாம். காலிழந்த கணவனின் பத்தினிப்
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
இதைவிட வேறு மாதிரி என் மனது கதை திரிக்க ஆரம்பித்தது ஒரு வேளை அவன்
கால்களை இழக்குமுன் திருமணமாகியிருக்கலாம் காலிழந்த கணவனின் பத்தினிப் 6
பெண். அவனது சுகத்திற்காகவே தன்னைத் தியாகம் செய்து கொள்ளும் ஒரு பத்தினிப்
பெண்ணின் உருவம் எனது மனக் கண்ணின் முன் தோன்றலாயிற்று.
அவனுக்கு வாழ்க்கை, சுகமா அல்லது இன்னலா, அதை அறியும்படி ஒரு சிறிய அவா
வரவரப் பெரிய ஆசையாகிவிட்டது.
நான் பேசிக் கொண்டுதான் இருந்தேன். மனது அதிவேகமாக வேறு பக்கம்
ஓடிக்கொண்டிருந்தது.
"அவனுக்கு மூன்று குழந்தைகள் இருக்கலாம். இரண்டு ஆண்கள், ஒரு பெண்.
பொம்மைகள் பெண்ணுக்கு; மற்றவை ஆண்களுக்கு; புதிய துணி மனைவிக்கு."
திடீரென்று "உங்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?" என்றேன்.
"இல்லை" என்றார்.
மரியாதைக் குறைவாக நடந்துகொண்ட மாதிரி என் மனதில் ஒரு குழப்பம் ஏற்பட்டது.
"மன்னிக்க வேண்டும், சாமான்களைக் கண்டவுடன் கேட்டேன். காதில் விழுவதைக்
கேட்காமலிருக்கலாம். கண்டதைக் கேட்காமலிருக்கலாம். கண்டதை வைத்துக்
கொண்டு அனுமானிக்கலாம்" என்றேன்.
புன்சிரிப்புடன், "இன்னும் எனக்குக் கலியாணங்கூட ஆகவில்லை." என்றார்.
திடீரென்று ஞாபகப்படுத்திக் கொண்டவன் போல், "மன்னிக்க வேண்டும்,
மனோன்மணியம்மாள்...?"
"தங்களுக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது" என்றார்.
"மனோன்மணியம்மாள் யாரையோ கலியாணம் செய்து கொண்டதாகவும் ஒரு
வதந்தி..."
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
" 7
"மிஸ்டர் பார்வதி நாதனை..."
"தங்கள் காயங்கள்தான் அதற்குக் காரணம் என்றும்..." முகத்தை நன்றாகக்
கவனித்தேன். முகம் வெட்கத்தால் சிவந்தது.
தோற்றுப்போன கட்சியை தோற்றுவிட்டது என்று தெரிந்த பிறகும் வாதிப்பவர் போல்,
ஒரு பரபரப்புடன் பேசிக்கொண்டே போனார்.
"மிஸ்டர் பார்வதிநாதனுடைய பெயருடன் என்னையும் முடிச்சு போடுவது வெறும்
அபத்தம். நான் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறியதும், அவள் என்னைக் கலியாணம்
செய்துகொள்ள நான் அனுமதிக்கவேயில்லை. அனுமதிப்பேனா? எதற்கு ஒருவனைக்
கலியாணம் செய்து கொள்வது? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு
நிமிஷமும், ஏன், ஒவ்வொரு வினாடியும் கூடி வாழவே ஒருவனைக் கலியாணம் செய்து
கொள்வது. அவனுக்கு என்னைப்போல் கால் இல்லாமலிருந்தால் மரணம் வரை
துன்பந்தான். தியாகத்தைப் போற்றுகிறேன். ஆனால் எனக்காக ஒரு பெண்ணின்
வாழ்க்கையையே தியாகமாக்க நான் சம்மதிக்க மாட்டேன். நான் நடக்கும் பொழுது
எல்லாம் இந்த மரக் கால் 'லொட்டு லொட்டு!' என்று இடியாக முழங்குகிறது. அவளை
முத்தமிட நெருங்குமுன் இந்த சப்தந்தானே காதைத் துளைக்கும்? அதை அவள் சகித்துக்
கொண்டு இருக்கும்படி செய்வேனோ? அவள் வேண்டுவது புருஷன்; நான்
வேண்டுவது அடிமை, பணியாள், அல்லது தாய், இது ஒத்து வருமா?"
பிறகு மெளனமாக இருந்தார். அவர் சொல்வது சரி என்று பட்டது. அவளைக் குற்றம்
சொல்ல முடியுமா? ஆனால் எனக்கு என்னவோ சுவாரஸ்யமான கதையின் இறுதியைப்
பிய்த்துவிட்ட மாதிரிப் பட்டது. எனது கதை உணர்ச்சி சாந்தியடையவில்லை.
என்னவோ ஏமாற்றப்பட்ட மாதிரிதான் இருந்தது.
"மனோன்மணியம்மாளுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?" என்று திடீரென்று
கேட்டேன்.
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
"மனோன்மணியம்மாளுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா " என்று திடீரென்று
கேட்டேன் 8
"ஒரு பெண்ணும் இரண்டு ஆணும்; இவைகள் எல்லாம் அவர்களுக்குத்தான். அவள்
புருஷன் என்மேல் அதிகப் பிரியமாக இருக்கிறார்!"
அதற்குள் அந்தச் சிறு டன்னல் வழியாக ரயில் சென்று பிளாட்பாரத்தில் நின்றது.
அவருக்கு உதவி செய்யும்படி நான் எழுந்தேன். அதற்குள் ஒரு மனிதனின் இரண்டு
கரங்கள், திறந்த கதவின் வழியாக நீட்டப்பட்டன.
அந்த மனிதனுக்குப் பின், அவனுடைய மனைவி குழந்தைகளுடன் நின்றாள் -
அதரத்தில் புன்சிரிப்பு.
குழந்தைகள், வெளியில் வைத்த சாமான்களைத் தூக்கிக்கொண்டன. இந்த நொண்டி
பிளாட்பாரத்தில் இறங்கியதும் குழந்தைகள் அவரைச் சுற்றிக் கொண்டன.
எல்லோரும் வெளியே புறப்பட்டார்கள். அந்தப் பெண் குழந்தை, அவர் அக்குளில்
கொடுத்து ஊன்றி நடந்த தடிகளைத் தனது சிறிய விரல்களால் பிடித்துக்கொண்டே
நடந்தது.
1934
62. ஒப்பந்தம்
பார்வதிநாதனுக்கு பி.ஏ. பாசாகிவிட்டது. அது மட்டுமல்ல. ஸர்வீஸ் கமிஷன்
பரீட்சையிலும் முதல் தொகுதியில் வந்துவிட்டான். சீக்கிரத்தில் வேலையாகிவிடும்.
கலியாணம் ஒன்றுதான் பாக்கி. அதையும் செய்து முடித்துவிட்டால் பையனைப் பற்றிய
கவலை ஓய்ந்துவிட்டது என்று நினைத்தார் சங்கரலிங்கம் பிள்ளை.
ஒரு நாள் காலை. பிள்ளையவர்கள், தாம்பிரவர்ணியின் ஸ்நான இன்பம், நீண்ட பூஜை
முதலியவற்றுக்கு முற்றுப்புள்ளியான காலை போஜனத்தை முடித்துக் கொண்டதும், சுக
ஜீவனத்தின் குதூகலத்தை அனுபவித்தவராய், "ஏளா, அங்கே என்ன செய்யுதே" என்று
தமது பத்தினியைக் கூப்பிட்டார்.
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
ஒரு நாள் காலை பிள்ளையவர்கள், தாம்பிரவர்ணியின் ஸ்நான இன்பம், நீண்ட பூஜை
முதலியவற்றுக்கு முற்றுப்புள்ளியான காலை போஜனத்தை முடித்துக் கொண்டதும், சுக
ஜீவனத்தின் குதூகலத்தை அனுபவித்தவராய், "ஏளா, அங்கே என்ன செய்யுதே" என்று
தமது பத்தினியைக் கூப்பிட்டார் 9
"என்ன, நீங்களா கூப்பிட்டிய; இன்னா வாரேன்."
"நம்ம குட்டிக்கு" - பார்வதிநாதனின் செல்லப் பெயர் - "பொண்ணு பார்க்க
வேண்டாமா?"
"எனக்கென்ன தெரியும்? நீங்க சொல்லுதது சதி. நம்ப சிங்கிகுளத்துப் பொண்ணெப்
பாத்தா என்ன? பொண்ணு நல்ல செவத்த பொண்ணு; கண்ணும் முளியும் அப்படியே
பாத்துக்கிட்டே இருக்கலாம். ஆனா, புள்ளையவாளுக்குப் பிடிக்குமோ என்னமோ?
இந்தக் காலத்துப் புள்ளையளை என்ன சொல்ல?"
"அதாரு, சிங்கிகுளத்திலே?"
"என்ன உங்களுக்குத் தெரியாதாக்கும்? பேட்டையக்கா இருக்காஹள்ள,
பார்வதியக்கா, அவளுக்கு ஒண்ணுவிட்ட தம்பி மக."
"சரி! சரி! நம்ம சுப்பராயப்பிள்ளை மகளா? என்ன நகை போடுவா?"
"அது எனக்கென்ன தெரியும்? கோமதியக்காக்கிட்ட விசாரிச்சா தெரியும். நா அவளைக்
கூப்பிடுதேன்" என்று வெளியே சென்று ஒரு விதவையைக் கூப்பிட்டு வந்தாள்.
"அம்மா, வா. இரி. நம்ம குட்டிக்கு இவ என்னமோ சிங்கி கொளத்துப் பொண்ணு
ஒண்ணு இருக்காமே. அதைப் பாக்கலாமென்னு சொல்லுதா. நீ என்னமோ,
பாத்திருக்கியாமே. அதெப்படி நகை என்னம்மா போடுவா?" என்று கேட்டார்
சங்கரலிங்கம் பிள்ளை.
"அதா, நல்ல எடமாச்சே. பொண்ணு தங்கமான கொணம். அவுஹளும் அப்படித்தான்.
என்னமோ ரெண்டு ஆயிரத்துக்கு செய்வாஹ இன்னு சொல்லி இருந்தாஹ."
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
அவுஹளும் அப்படித்தான்
என்னமோ ரெண்டு ஆயிரத்துக்கு செய்வாஹ இன்னு சொல்லி இருந்தாஹ " 10
"இம்புட்டுத்தானே! சதி, சதி. பேச்செ விட்டுத் தள்ளு. நம்ம பேட்டைப்பிள்ளை
ஐயாயிரம் நகை மருக, கலியாணச் செலவு ஒரு ரெண்டாயிரம் யென்று சொன்னாரே!"
"ஆமா, பொண்ணு கறுப்பில்லியா? எதுக்கும் கேட்டுப் பாருங்களேன்."
"சதி, நீ என்ன சொல்லுதே?"
"பாத்தா என்ன? நானும் அக்காளும் போயிட்டுத்தான் வாரமே!" என்றாள்.
"சதி, நாளைக்கு மேக்கெ சூலம். நாளைக் கழிச்சி உதயத்திலெ வண்டியப்
போட்டுகிட்டுப் போய் பாத்துட்டு வாருங்க. பொறவு நாவன்னாவை விட்டு நான்
விசாரிக்கேன்."
"அய்யா, தபால்!" என்று தபால்காரன் உள்ளே நுழைந்து கவர்மென்டு முத்திரையிட்ட
நீண்ட 'ஸ்கோடா'வைக் கொடுத்தான்.
"நம்ம குட்டிக்குப் போல இருக்கு. ஏலே அய்யா!" என்று கூப்பிட்டார்.
"என்னப்பா?" என்று கீழே வந்தான் பார்வதிநாதன்.
கடிதத்தைப் பிரித்துப் பார்க்க, சென்னையில் குமாஸ்தா வேலையாகியிருப்பதாகவும்,
25-ந் தேதி வந்து வேலை ஒப்புக்கொள்ளும்படியும் எழுதியிருந்தது.
வீட்டில் ஒரே குதூஹலம். தபால்காரன் 'பசஷிஸ்' தட்டாமல் போகவில்லை.
"ஏலே அய்யா! உனக்கு ஒங்கம்மை சிங்கிகொளத்துப் பொண்ணைப் பார்த்திருக்கிறா,
அப்பா. ஒனக்குப் புடிக்குமா?" என்று கேட்டார்.
பார்வதிநாதனுக்கு இந்த விஷயம் திடுக்கிடச் செய்தது. இந்த மாதிரி தகப்பனார்
பேசியது இதுதான் முதல் தரம். முகம் வெட்கத்தால் சிவந்தது. ஒன்றும் பேசாமல்
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
இந்த மாதிரி தகப்பனார்
பேசியது இதுதான் முதல் தரம் முகம் வெட்கத்தால் சிவந்தது ஒன்றும் பேசாமல் 11
மெத்தைக்கு ஏறினவன். "நாளைக்குப் புறப்பட வேண்டும்" என்று சொல்லிவிட்டுச்
சென்றுவிட்டான்.
2
பெண்ணை எல்லாம் போய்ப் பார்த்துவிட்டு வந்தாகிவிட்டது. சங்கரலிங்கம்
பிள்ளையின் மனைவிக்கு சிங்கிகுளத்துப் பெண் பேரில் நோக்கம்.
சங்கரலிங்கம் பிள்ளைக்கு இப்பொழுது மகனுக்கு வேலையாகி விட்டதால் ரேட்டை
உயர்த்த வேண்டும் என்ற நோக்கம். நகை வழியாகக் குறைந்தது மூவாயிரமாவது
கறந்துவிடவேண்டும் என்ற தீர்மானம்.
நாவன்னா - நாராயண பிள்ளை அவர் பெயர் - அவரை விட்டுப் பெண்
வீட்டுக்காரரைத் தூண்டிவிடும்படி ஏற்பாடு செய்தார்.
நாராயண பிள்ளை ஒரு தடவை சிங்கிகுளத்துப் பக்கம் சென்றார். "நம்ம பையன்
ஒருவன் இருக்கிறான். கொடுக்கலாம். நல்ல இடம்!" என்றார். விஸ்தரிப்பானேன்?
பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளை வீட்டாரைக் கண்டு பேசப் புறப்பட்டார். நண்பர்
நாவன்னா வீட்டில் ஜாகை.
மறுநாள்.
இருவரும் சங்கரலிங்கம் பிள்ளை வீட்டிற்கு வருகிறார்கள்.
"அண்ணாச்சி, இவுஹதான் நம்ம சிங்கிகுளத்துப் பிள்ளையவாள். இந்தப் பக்கத்திலே
வந்திருந்தாஹ பாத்துக்கிட்டுப் போகட்டுமே என்று கூட்டி வந்தேன்" என்றார்
நாவன்னா.
"அப்பிடியா! வாருங்க! வாருங்க! ஏளா! வெத்திலை செல்லத்தை எடு. அங்கே தூத்துட்டு
சமுக்காளத்தை விரி! காப்பி சாப்பிடுங்களேன். அம்மாளு ரெண்டு எலையைப் போடு!"
என்று துரிதப்படுத்தினார்.
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
அம்மாளு ரெண்டு எலையைப் போடு "
என்று துரிதப்படுத்தினார் 12
அவருடைய தர்மபத்தினியும், "வாருங்க! சேவிக்கேன்!" என்று வரவேற்றுவிட்டு, அவசர
அவசரமாகப் பெருக்கிவிட்டு, ஜமுக்காளத்தை எடுத்து விரித்து, வெற்றிலைச்
செல்லத்தை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
"நாங்கள் எல்லாம் காப்பி ஆச்சு. நீங்கள் ஆச்சா? இல்லவிட்டா முடிச்சுக்கொண்டு
வந்துவிடுங்கள்" என்றார் நாராயண பிள்ளை.
"நான் எல்லாம் ஆச்சு! வெத்திலைப் போடுங்க" என்றார் சங்கரலிங்கம் பிள்ளை.
பேச்சு மெதுவாகப் பெண் விஷயத்தில் வந்து விழுந்தது.
"ஆமாம்! பையனுக்கு வேலையும் ஆச்சே, முடிச்சுவிடலாம் என்று எண்ணுகிறேன்"
என்றார்.
"ஆமாம் அது செய்ய வேண்டியதுதான்" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை.
"உங்களுக்குத் தெரியாததா? நகை ஒரு ரெண்டாயிரம், மத்தச் செலவு ஒரு ஆயிரம்!"
என்றார்.
"என்ன, நம்ம பேட்டையப்பிள்ளை சொன்னதைக் கேட்டியள்ள?" என்றார்
சங்கரலிங்கம் பிள்ளை.
"ஆமா, ஆமா. அதிருக்கட்டும். இந்தக் காலத்திலே ஆயிரத்தைச் சொன்னாப் போதுமா?
சொன்னதைச் சொன்னபடி செய்யணும். அது நம்ம பிள்ளையவாள்தான். நான் ஒன்று
பொதுவாகச் சொல்லுகிறேன். நகை மூவாயிரம், மத்தது ரெண்டாயிரம்!" என்றார்.
எல்லாரும் சற்று மெளனம்.
"அண்ணாச்சி! நீங்க ஒரேடியா மொதொண்டாதிக. பிள்ளைவாள்! நீங்க காலைத்
தேச்சா பிரயோசனமில்லை. நல்ல இடம். பையனுக்கு நல்ல அதிர்ஷ்டம் கவர்மெண்டு
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
நீங்க காலைத்
தேச்சா பிரயோசனமில்லை நல்ல இடம் பையனுக்கு நல்ல அதிர்ஷ்டம் கவர்மெண்டு 13
வேலை. இனிசூபெக்டரு, தாசில்தாரா வரலாம் உங்க பெண்ணுக்கு ராஜயோகம்!"
என்று மத்தியஸ்தம் பேசினார் நாவன்னா.
"சதி! பொறவு நீங்க சொல்லுறப்பா என்னா?" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை.
"வேறெ என்ன அய்யா? இப்பவே வெத்தலை பாக்கு கைமாறிடுத்து. வர
வியாழக்கிழமை நல்ல தினம். அன்னைக்கி திருமங்கிலியத்திற்குப் பொன்னுருக்கி
விடுகிறது. சரிதானே பிள்ளைவாள்?" என்று ஒரு வெள்ளித் தாம்பாளத்தைச்
சங்கரலிங்கம் பிள்ளையின் தர்மபத்தினியிடம் வாங்கி அந்தச் சிறு சடங்கை நடித்து
முடித்தார்கள்.
சென்னையில் அன்று சாயங்காலம்.
பார்வதிநாதன் வேலை ஒப்புக்கொண்டாகிவிட்டது. தகப்பனார் கொடுத்த பணம்
கொஞ்சம் கையில் ஓட்டம். சினிமாவிற்குச் சென்றான்.
இவனுக்குப் பக்கத்தில் ஒரு ஆங்கிலோ இந்திய மாது - இளநங்கை -
உட்கார்ந்திருந்தாள்.
தகப்பனார் அன்று பெண் விஷயத்தைக் கேட்டதிலிருந்து அவனுக்கு ஒரு புதிய
உணர்ச்சி, இயற்கையின் தேவை, அடிக்கடி மனத்தில் சுற்றிக்கொண்டே இருந்தது.
பார்வதிநாதன் நல்ல பையன் தான். இதுவரை அந்த நினைப்பிற்கு அவகாசமில்லை.
ஆனால் அந்தத் தினத்திலிருந்து அவனது உடல் கட்டுக்கடங்கவில்லை.
அன்று இருவர் சினிமா பார்க்கவில்லை.
அந்த நங்கை ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் அவன் மனைவியாக இருக்கச்
சம்மதித்தாள். இருவரும் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள்.
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
அந்த நங்கை ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் அவன் மனைவியாக இருக்கச்
சம்மதித்தாள் இருவரும் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள் 14
அந்தச் சிங்கிகுளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து, அவனுடன்
வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளச் சம்மதிக்கும் பொழுது, ஐந்து ரூபாய்க்கு
இரண்டு மணி நேரம் சரிதானே?
மணிக்கொடி, 05-08-1934
63. ஒரு கொலை அனுபவம்
இருள். எங்கு பார்த்தாலும் கரியவிருள். ரோட்டில் வெளிச்சம் மங்கியது. ஒற்றை
விளக்கு.
அந்த இருட்டிலே ஒரு மனிதன் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டு போகிறான்.
உள்ளூர ஒரு பாட்டு. குடிப் பேர்வழி. அந்த இருட்டிலும் பாடிக்கொண்டு போகிறானே.
ஆசாமி தைரியசாலியாகத்தான் இருக்க வேண்டும். நான் என்றால் பேசவே மாட்டேன்.
இதென்ன வேடிக்கை? அவனுக்கென்ன பைத்தியமா? விளக்கைப் பிடித்துத்
தொத்திக்கொண்டு ஏன் ஏற வேண்டும்? விளக்கு ஏற்றி இருக்கும்பொழுது இவன்
என்ன அங்கு போய் சாதிக்கப் போகிறான்? இதுவும் ஒரு வேடிக்கைதான்.
ஏறி இரும்புக் கம்பத்தின் குறுக்கில் உட்கார்ந்துகொண்டு "ராஜாதி ராஜன் நானே"
என்று பாடுகிறானே. அவனும் ராஜன் தான்! இவனுக்கும் ஹிட்லருக்கும் ஒரு
வித்தியாசமும் கிடையாது.
அடடா! முகத்தைப் பார்த்தால் என்போல் இருக்கிறதே! நான் தான் அவன். இதென்ன
வேடிக்கை? முகத்தைப் பார்த்தால் எனக்கு இரட்டைச் சகோதரன் மாதிரி இருக்கிறான்.
எங்கே வந்து சொத்தில் உரிமை கேட்கப் போகிறானோ?
விளக்கெல்லாம் அணைந்துவிட்டதே! இதென்ன அதிசயம்? ஏன் விளக்கு அணைய
வேண்டும்? இரவு பூராவும் எரிவதென்றால் முனிஸிபாலிட்டியாருக்கு குடி
முழுகிவிடும்போல் இருக்கிறது.
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
ஏன் விளக்கு அணைய
வேண்டும் இரவு பூராவும் எரிவதென்றால் முனிஸிபாலிட்டியாருக்கு குடி
முழுகிவிடும்போல் இருக்கிறது 15
அந்த இருட்டில் பாதையின் திருப்பத்திலிருந்து இன்னொரு உருவம் வருகிறது. ஏன்
இப்படி நடக்கவேண்டும்? ஆசாமியைப் பார்த்தால் பொம்மை மாதிரி. கிட்ட
நெருங்கட்டும். அதைத்தான் பார்ப்போம். இதென்ன அதிசயம்? அவனும் நான் தான்.
முதல் வந்த ஆசாமிதானா அவன்? தலைதான் கம்பத்தின் மேல் தெரிகிறதே. எனக்குப்
பைத்தியமா? அல்லது பிரம்மாவிற்குத்தான் பைத்தியம் பிடித்துவிட்டதா? அல்லது
பிரம்மாவிற்கு நான் சொத்து சுகம் வைத்துக்கொண்டிருப்பதில் பொறாமையா?
அந்த 'எனக்கு' ஏன் பயம் போட்டு ஆட்ட வேண்டும்? இரண்டு பிரதிபிம்பங்கள்.
இயற்கையின் கூத்தா? அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரியா?
இரவில் இன்னொரு உருவம் அதற்குப் பின் ஒளிந்துகொண்டு வருகிறது. அவனாவது
வேறு மாதிரியாக இருக்க வேண்டும். இரண்டாவது ஆசாமியை நெருங்குகிறானே.
முகம் தெரிகிறது. நல்ல காலம். அவனுக்கு தாடியும் மீசையும் இருக்கிறது. நானல்ல!
என்ன? நன்றாகப் பார். அவனும் நான் தான். எனக்கு தாடியும் மீசையுமா
முளைத்திருக்கிறது? எனது முகத்தில் ஒன்றையும் காணோமே! முகத்தையும்
கண்ணையும் பார்த்தால் என்ன பயமாக இருக்கிறது. மூன்று பேரும் நான் தானா
அல்லது 'எல்லாம் நானே' என்ற முக்தியை அடைந்துவிட்டேனா?
தாடியுடைய 'என்' கையில் என்ன மின்னுகிறது?
கத்தி.
முன் செல்லும் 'எனக்குப்' பின் வந்த இரண்டாவது 'நான்' ஏன் பதுங்கிப் பதுங்கிச்
செல்ல வேண்டும்? முதல் 'நான்' எங்கே?
ஆமாம்! அவன் குஷியாக கம்பத்தின் மீது பாட்டுப் பாடுகிறான்.
நெருங்கிவிட்டான்!
"அய்யோ கொல்கிறானே!'
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
நெருங்கிவிட்டான்
"அய்யோ கொல்கிறானே ' 16
மூன்றும் என் குரல். எல்லாம் இருள். ஒன்றையும் காணோம்!
விழித்தேன். பக்கத்தில் எனது நண்பன். 'பகலில் என்ன தூக்கம்?' என்று முதுகைத்
தட்டிக்கொண்டிருந்தான். எதிரே எழுதுகோல், காகிதம், இத்யாதி. துப்பறியும் நாவல்
எழுதுவது என்றால் லேசா? தூக்குத் தண்டனை இல்லாமல் ஆட்களைக் கொல்ல
வேண்டும். பிறகு துப்பறிவோனாகக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பப்பா? அந்தத்
தொழில் நமக்கு வேண்டாம். மானுடன் ஓடிக் கொண்டு நாயுடன் துரத்த என்னால்
முடியாது.
ஊழியன், 22-02-1935
64. பால்வண்ணம் பிள்ளை
பால்வண்ணம் பிள்ளை கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா. வாழ்க்கையே தஸ்தாவேஜிக்
கட்டுகளாகவும், அதன் இயக்கமே அதட்டலும், பயமுமாகவும், அதன் முற்றுப்புள்ளியே
தற்பொழுது 35 ரூபாயாகவும் - அவருக்கு இருந்து வந்தது. அவருக்குப் பயமும்,
அதனால் ஏற்படும் பணிவும் வாழ்க்கையின் சாரம். அதட்டல் அதன் விதிவிலக்கு.
பிராணிநூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நான்கு கால்கள் என்று கூறமாம்.
ஆனால் பால்வண்ணம் பிள்ளையைப் பொறுத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு
மூன்று கால்கள்தான். சித்த உறுதி, கொள்கையை விடாமை, இம்மாதிரியான
குணங்கள் எல்லாம் படைவீரனிடமும், சத்தியாக்கிரகிகளிடமும் இருந்தால் பெருங்
குணங்களாகக் கருதப்படும். அது போயும் போயும் ஒரு கலெக்டர் ஆபீஸ்
குமாஸ்தாவிடம் தஞ்சம் புகுந்தால் அசட்டுத்தனமான பிடிவாதம் என்று கூறுவார்கள்.
பால்வண்ணம் பிள்ளை ஆபீஸில் பசு. வீட்டிலோ ஹிட்லர். அன்று கோபம்.
ஆபீஸிலிருந்து வரும் பொழுது - ஹிட்லரின் மீசை அவருக்கு இல்லாவிட்டாலும் -
உதடுகள் துடித்தன. முக்கியமாக மேலுதடு துடித்தது. காரணம், ஆபீஸில் பக்கத்துக்
குமாஸ்தாவுடன் ஒரு சிறு பூசல். இவர் மெக்ஸிகோ தென் அமெரிக்காவில் இருக்கிற
தென்றார். இவருடைய நண்பர் பூகோள சாஸ்திரம் வேறு மாதிரிக் கூறுகிறதென்றார்.
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
இவர் மெக்ஸிகோ தென் அமெரிக்காவில் இருக்கிற
தென்றார் இவருடைய நண்பர் பூகோள சாஸ்திரம் வேறு மாதிரிக் கூறுகிறதென்றார் 17
பால்வண்ணம் பிள்ளை தமது கட்சியை நிரூபிப்பதற்காக வெகு வேகமாக வீட்டிற்கு
வந்தார்.
பால்வண்ணம் பிள்ளைக்கும் அவருடைய மனைவியாருக்கும் கர்ப்பத் தடையில்
நம்பிக்கை கிடையாது. அதன் விளைவு வருஷம் தவறாது ஒரு குழந்தை. தற்பொழுது
பால்வண்ண சந்ததி நான்காவது எண்ணிக்கை; பிறகு வருகிற சித்திரையில் நம்பிக்கை.
இப்படிப்பட்ட குடும்பத்தில் பால்வண்ணக் 'கொடுக்கு'கள் 'பேபி ஷோ'க்களில் பரிசு
பெறும் என்று எதிர்பார்க்க முடியாது. பால்வண்ணம் பிள்ளையின் சகதர்மிணி,
உழைப்பிலும் பிரசவத்திலும் சோர்ந்தவள். தேகத்தின் சோர்வினாலும், உள்ளத்தின்
களைப்பினாலும் ஏற்பட்ட பொறுமை.
கைக்குழந்தைக்கு முந்தியது சவலை. கைக் குழந்தை பலவீனம். தாயின் களைத்த தேகம்
குழந்தையைப் போஷிக்கச் சக்தியற்று விட்டது. இப்படியும் அப்படியுமாக, தர்ம
ஆஸ்பத்திரியின் மருந்துத் தண்ணீரும், வாடிக்கைப் பால்காரனின் கடன் பாலுமாக,
குழந்தைகளைப் போஷித்து வருகிறது. அந்த மாதம் பால் 'பட்ஜட்' - எப்பொழுதும்
போல் - நான்கு ரூபாய் மேலாகி விட்டது.
இம்மாதிரியான நிலைமையில் பால் பிரச்னையைப் பற்றி பால்வண்ணம் பிள்ளையின்
சகதர்மிணிக்கு ஒரு யுக்தி தோன்றியது. அது ஒன்றும் அதிசயமான யுக்தியல்ல.
குழந்தைகளுக்கு உபயோகமாகும்படி ஒரு மாடு வாங்கி விட்டால் என்ன என்பதுதான்.
தெய்வத்தின் அருளைத் திடீரென்று பெற்ற பக்தனும், புதிதாக ஒரு உண்மையைக்
கண்டுபிடித்த விஞ்ஞானியும், 'சும்மா' இருக்க மாட்டார்கள். சளசளவென்று
கேட்கிறவர்கள் காது புளிக்கும்படி சொல்லிக் கொட்டி விடுவார்கள். பால்வண்ணம்
பிள்ளையின் மனைவிக்கும் அதே நிலை ஏற்பட்டது.
பிள்ளையவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது, அவர் ஸ்கூல் பைனல் வகுப்பில்
உபயோகித்த பூகோளப் படம் எங்கு இருக்கிறது, மாடியிலிருக்கும் ஷெல்பிலா, அல்லது
அரங்கிலிருக்கும் மரப் பெட்டியிலா என்று எண்ணிக் கொண்டு வந்தார்.
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
பால்வண்ணம்
பிள்ளையின் மனைவிக்கும் அதே நிலை ஏற்பட்டது
பிள்ளையவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது, அவர் ஸ்கூல் பைனல் வகுப்பில்
உபயோகித்த பூகோளப் படம் எங்கு இருக்கிறது, மாடியிலிருக்கும் ஷெல்பிலா, அல்லது
அரங்கிலிருக்கும் மரப் பெட்டியிலா என்று எண்ணிக் கொண்டு வந்தார் 18
வீட்டிற்குள் ஏறியதும், "ஏளா! அரங்குச் சாவி எங்கே?" என்று கேட்டுக்கொண்டே
மாடிக்குச் சென்று ஷெல்பை ஆராய்ந்தார்.
அவர் மனைவி சாவியை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தாள். அவளுக்குப் பால்
நெருக்கடியை ஒழிக்கும் மாட்டுப் பிரச்னையை அவரிடம் கூற வேண்டும் என்று
உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. ஆனால் மெக்ஸிகோ பிரச்னையில்
ஈடுபட்டிருக்கும் பால்வண்ணம் பிள்ளையின் மனம் அதை வரவேற்கும் நிலையில்
இல்லை.
"என்ன தேடுதிய?" என்றாள்.
"ஒரு பொஸ்தகம். சாவி எங்கே?"
"இந்தாருங்க. ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லுணுமே! இந்தப் புள்ளைகளுக்குப் பால்
செலவு சாஸ்தியா இருக்கே! ஒரு மாட்டெத்தான் பத்து நூறு குடுத்து புடிச்சிப்புட்டா
என்ன?" என்றாள்.
"இங்கே வர வேண்டியதுதான், ஒரே ராமாயணம். மாடு கீடு வாங்க முடியாது. எம்
புள்ளெய நீத்தண்ணியை குடிச்சு வளரும்!" என்று சொல்லி விட்டார். மெக்ஸிகோ வட
அமெரிக்காவிலிருந்தால் பிறகு ஏன் அவருக்குக் கோபம் வராது?
பால் பிரச்னை அத்துடன் தீர்ந்து போகவில்லை. அவர் மனைவியின் கையில் இரண்டு
கெட்டிக் காப்பு இருந்தது. அவளுக்குக் குழந்தையின் மீதிருந்த பாசத்தினால், அந்தக்
காப்புகள் மயிலைப் பசுவும் கன்றுக் குட்டியுமாக மாறின.
இரண்டு நாள் கழித்துப் பால்வண்ணம் பிள்ளை ஆபீஸிலிருந்து வந்து புறவாசலில் கை
கழுவச் சென்ற பொழுது, உரலடியில் கட்டியிருந்த கன்று, வைக்கோல் அசை போட்டுக்
கொண்டிருக்கும் மாட்டைப் பார்த்து 'அம்மா' வென்று கத்தியது.
"ஏளா?" என்று கூப்பிட்டார்.
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
"ஏளா " என்று கூப்பிட்டார் 19
மனைவி சிரித்துக் கொண்டே - உள்ளுக்குள் பயம் தான் - வந்தாள்.
"மாடு எப்பொழுது வந்தது? யார் வாங்கிக் கொடுத்தா?" என்றார்.
"மேலவீட்டு அண்ணாச்சி வாங்கித் தந்தாஹ. பாலு ஒரு படி கறக்குமாம்!" என்றாள்.
"உம்" என்றார்.
அன்று புதுப்பால், வீட்டுப் பால் காப்பி கொண்டு வந்து வைத்துக் கொண்டு
கணவரைத் தேடினாள். அவர் இல்லை.
அதிலிருந்து பிள்ளையவர்கள் காப்பியும் மோரும் சாப்பிடுவதில்லை.
அவர் மனைவிக்கு மிகுந்த வருத்தம். ஒரு பக்கம் குழந்தைகள். மற்றொரு பக்கம்
புருஷன் என்ற குழந்தை. வம்சவிருத்தி என்ற இயற்கை விதி அவளை வென்றது.
இப்படிப் பதினைந்து நாட்கள்.
மாட்டை என்ன செய்வது?
அன்று இரவு எட்டு மணி இருக்கும். பால்வண்ணம் பிள்ளையும் சுப்புக் கோனாரும்
வீட்டினுள் நுழைந்தார்கள்.
"மாட்டைப் பாரும். இருபத்தஞ்சி ரூபா!" என்றார்.
"சாமி! மாடு அறுபது ரூபாய் பெறுமே!" என்றார் சுப்புக் கோனார். "இருபத்தைந்து
தான். உனக்காக முப்பது ரூபாய் என்ன? இப்பொழுதே பிடித்துக் கொண்டு போக
வேண்டும்!"
"சாமி! ராத்திரியிலா? நாளைக்கு விடியன்னே பிடிச்சிக்கிறேன்!" என்றார்
சுப்புக்கோனார்.
<|endoftext|>
<|startoftext|>
புதுமைப்பித்தன்
சிறுகதை
நாளைக்கு விடியன்னே பிடிச்சிக்கிறேன் " என்றார்
சுப்புக்கோனார் 20
"உம் இப்பவே?"
மாட்டையவிழ்த்தாய் விட்டது.
மனைவி 'மாடு எழுபது ரூபாயாயிற்றே, குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று
தடுத்தாள். மேலும் வரும்படி வேறு வருகிறதாம்.
"என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக் கிடும்" என்றார் பிள்ளை.
சுப்புக் கோனார் மாட்டை அவிழ்த்துக் கொண்டு போகும் பொழுது, மூத்த பையன்,
"அம்மா! என் கன்னுக் குட்டி!" என்று எழுந்து உட்கார்ந்து கொண்டு அழுதான்.
"சும்மா கெட, சவமே!" என்றார் பால்வண்ணம் பிள்ளை.
மணிக்கொடி, 30-12-1934
65. பறிமுதல்
43 நெர். கைதி ஒரு பயங்கரப் புரட்சிக்காரன். அவன் பேரில் அரசியல் விஷயமாகக்
கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
பயங்கரப் புரட்சிக்காரன் என்று சமுதாயத்தின் சார்பாக அரசாங்கம் முடிவு
கட்டிவிட்டது. ஆனால் அவனைப் பார்த்தால் அப்படித் தோன்றாது. இயற்கைச்
சிருஷ்டியில் வசீகரப்படுத்தும் ஒரு ஜீவன் இருந்தால் அது 43 நெர். கைதி.
அவன் இருக்கும் அறை தனி. வெளிச்சம் வருவதற்கு அல்லாமல் காற்று வருவதற்கு
மட்டும் ஒரு சிறிய துவாரம். அதன் வழியாகப் பெரிய பூனை நுழையலாம். ஆனால்,
புரட்சிக்காரர்கள் பூனை வடிவம் எடுக்கக்கூடும் என்று பயந்தோ என்னவோ அதிலும்
இரும்புக் கம்பி.
<|endoftext|>